23. சிறை விடு காதை
ADVERTISEMENTS
23. சிறை விடு காதை
மன்னவன் அருளால் வாசந்தவை எனும் நல் நெடுங் கூந்தல் நரை
மூதாட்டி அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் திரு நிலக் கிழமைத்
தேவியர்க்கு ஆயினும் கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும் பட்டவை
துடைக்கும் பயம் கெழு மொழியினள் இலங்கு அரி நெடுங் கண் இராசமாதேவி
கலங்கு அஞ்அர் ஒழியக் கடிது சென்று எய்தி அழுது அடி வீழாது ஆய் இழை
தன்னைத் தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி
23-010
ADVERTISEMENTS
'கொற்றம் கொண்டு குடி புறங்காத்து செற்றத் தெவ்வர் தேஎம் தமது
ஆக்கியும் தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து !செருப் புகல் மன்னர்
செல்வுழிச் செல்க! என மூத்து விளிதல் இக் குடிப் பிறந்தோர்க்கு நாப்
புடைபெயராது நாணுத் தகவுடைத்தே தன் மண் காத்தன்று பிறர் மண் கொண்டன்று
என் எனப் படுமோ நின் மகன் மடிந்தது? மன்பதை காக்கும் மன்னவன் தன்
முன் துன்பம் கொள்ளேல்' என்று அவள் போய பின்
23-020
ADVERTISEMENTS
கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு
புறம் மறைத்து 'வஞ்சம் செய்குவன் மணிமேகலையை' என்று அம் சில் ஓதி
அரசனுக்கு ஒரு நாள் 'பிறர் பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து அறிவு
திரிந்தோன் அரசியல் தான் இலன் கரும்பு உடைத் தடக் கைக் காமன் கையற
அரும் பெறல் இளமை பெரும்பிறிதாக்கும் அறிவு தலைப்பட்ட ஆய் இழை
தனக்குச் சிறை தக்கன்று செங்கோல் வேந்து!' எனச்
23-030
'சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு'
என்பது அறிந்தனைஆயின் இவ் ஆய் இழை தன்னைச் செறிந்த சிறை நோய்
தீர்க்க' என்று இறை சொல 'என்னோடு இருப்பினும் இருக்க இவ் இளங்கொடி
தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்' என்று அங்கு அவள் தனைக் கூஉய்
அவள் தன்னோடு கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு 'அறிவு
திரித்து இவ் அகல் நகர் எல்லாம் எறிதரு கோலம் யான் செய்குவல்' என்றே
23-040
மயல் பகை ஊட்ட மறு பிறப்பு உணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவினள்
ஆகக் கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய் 'வல்லாங்குச் செய்து மணிமேகலை தன்
இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்துப் புணர் குறி செய்து
!பொருந்தினள்! என்னும் பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை' என்றே காணம்
பலவும் கைந் நிறை கொடுப்ப ஆங்கு அவன் சென்று அவ் ஆய் இழை இருந்த
பாங்கில் ஒரு சிறைப்பாடு சென்று அணைதலும்
23-050
'தேவி வஞ்சம் இது' எனத் தௌிந்து நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி
ஆண்மைக் கோலத்து ஆய் இழை இருப்ப காணம் பெற்றோன் கடுந் துயர் எய்தி
'அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் நிரயக் கொடு மகள் நினைப்பு அறியேன்'
என்று அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின் 'மகனை நோய் செய்தாளை
வைப்பது என்?' என்று 'உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள்' என பொய்ந் நோய்
காட்டிப் புழுக்கறை அடைப்ப
23-060
ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப
ஐயென விம்மி ஆய் இழை நடுங்கி செய் தவத்தாட்டியைச் சிறுமை செய்தேன்
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது பொன் நேர் அனையாய்! பொறுக்க! என்று
அவள் தொழ 'நீலபதி தன் வயிற்றில் தோன்றிய ஏலம் கமழ் தார் இராகுலன்
தன்னை அழற்கண் நாகம் ஆர் உயிர் உண்ண விழித்தல் ஆற்றேன் என் உயிர்
சுடு நாள்
23-070
யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு? பூங்கொடி நல்லாய்!
பொருந்தாது செய்தனை உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ? உடற்கு
அழுதனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே?
உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் செயப்பாட்டு வினையால்
தெரிந்து உணர்வு அரியது அவ் உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி! எவ்
உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் மற்று உன் மகனை மாபெருந்தேவி
23-080 செற்ற கள்வன் செய்தது கேளாய் மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல் துணிசெய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே !யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ? எனின் பூங் கொடி நல்லாய்! புகுந்தது இது என மொய்ம் மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா தெய்வக் கட்டுரை தௌிந்ததை ஈறா உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து
மற்றும் உரை செயும் மணிமேகலை தான் 'மயல் பகை ஊட்டினை மறு பிறப்பு
உணர்ந்தேன் அயர்ப்பதுசெய்யா அறிவினேன் ஆயினேன் கல்லாக் கயவன் கார்
இருள் தான் வர நல்லாய்! ஆண் உரு நான் கொண்டிருந்தேன் ஊண் ஒழி
மந்திரம் உடைமையின் அன்றோ மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது? அந்தரம்
சேறலும் அயல் உருக் கோடலும் சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில்
காதலற் பயந்தோய்! கடுந் துயர் களைந்து
23-100
தீது உறு வெவ் வினை தீர்ப்பதுபொருட்டால் தையால்! உன் தன் தடுமாற்று
அவலத்து எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் ஆள்பவர் கலக்குற
மயங்கிய நல் நாட்டுக் காருக மடந்தை கணவனும் கைவிட ஈன்ற குழவியொடு
தான் வேறாகி மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி புதல்வன் தன்னை
ஓர் புரி நூல் மார்பன் பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க ஆங்கு அப்
புதல்வன் அவள் திறம் அறியான்
23-110
தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும் நீர் நசை
வேட்கையின் நெடுங் கடம் உழலும் சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓடக்
கான வேட்டுவன் கடுங் கணை துரப்ப மான் மறி விழுந்தது கண்டு மனம்
மயங்கி பயிர்க் குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி உயிர்ப்பொடு செங்
கண் உகுத்த நீர் கண்டு ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும் கேட்டும்
அறிதியோ வாள் தடங் கண்ணி கடாஅ யானைமுன் கள் காமுற்றோர்
23-120
விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது உண்ட கள்ளின் உறு செருக்கு
ஆவது கண்டும் அறிதியோ காரிகை நல்லாய் பொய்யாற்று ஒழுக்கம் பொருள்
எனக் கொண்டோர் கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ? 'களவு ஏர்
வாழ்க்கையர் உறூஉம் கடுந் துயர் இள வேய்த் தோளாய்க்கு இது' என வேண்டா
மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை துன்பம் தருவன துறத்தல்
வேண்டும் கற்ற கல்வி அன்றால் காரிகை!
23-130
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் மல்லல் மா ஞாலத்து வாழ்வோர்
என்போர் அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் திருந்து ஏர் எல் வளை!
செல் உலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர் துன்பம்
அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர் மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார்' என
ஞான நல் நீர் நன்கனம் தௌித்து தேன் ஆர் ஓதி செவிமுதல் வார்த்து
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக 2
23-140
அகம் சுடு வெந் தீ ஆய் இழை அவிப்ப தேறு படு சில் நீர் போலத் தௌிந்து
மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி ஆங்கு அவள் தொழுதலும் ஆய் இழை பொறாஅள்
தான் தொழுது ஏத்தி 'தகுதி செய்திலை' காதலற் பயந்தோய் அன்றியும்
காவலன் மாபெருந்தேவி' என்று எதிர் வணங்கினள் என்
23-147
முன்புறம்