ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

ADVERTISEMENTS

9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
ஆங்கு அது கண்ட ஆய் இழை அறியாள் காந்தள் அம் செங் கை தலை
மேல் குவிந்தன தலைமேல் குவிந்த கையள் செங் கண் முலை மேல் கலுழ்ந்து
முத்தத் திரள் உகுத்து அதின் இடமுறை மும் முறை வலமுறை வாரா கொடி மின்
முகிலொடு நிலம் சேர்ந்தென்ன இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து ஆங்கு
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து 'தொழு தகை மாதவ! துணி பொருள்
உணர்ந்தோய்! காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம்
09-010
ADVERTISEMENTS

வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன் காந்தாரம் என்னும் கழி பெரு
நாட்டுப் பூருவ தேயம் பொறை கெட வாழும் அத்திபதி எனும் அரசு ஆள்
வேந்தன் மைத்துனன் ஆகிய பிரமதருமன்! ஆங்கு அவன் தன்பால் அணைந்து அறன்
உரைப்போய் !தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவிடை இன்று ஏழ் நாளில் இரு
நில மாக்கள் நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே! பூமி நடுக்குறூஉம்
போழ்தத்து இந் நகர்
09-020
ADVERTISEMENTS

நாக நல் நாட்டு நானூறு யோசனை வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்
இதன்பால் ஒழிக! என இரு நில வேந்தனும் மா பெரும் பேர் ஊர் மக்கட்கு
எல்லாம் !ஆவும் மாவும் கொண்டு கழிக! என்றே பறையின் சாற்றி நிறை அருந்
தானையோடு இடவயம் என்னும் இரும் பதி நீங்கி வட வயின் அவந்தி மா நகர்ச்
செல்வோன் காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை சேய் உயர் பூம்பொழில்
பாடி யெய்து இருப்ப
09-030

எம் கோன் நீ ஆங்கு உரைத்த அந் நாளிடைத் தங்காது அந் நகர் வீழ்ந்து
கேடு எய்தலும் மருள் அறு புலவ! நின் மலர் அடி அதனை அரசொடு மக்கள்
எல்லாம் ஈண்டிச் சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய அருளறம்
பூண்ட ஒரு பேர் இன்பத்து உலகு துயர் கெடுப்ப அருளிய அந் நாள் அரவக்
கடல் ஒலி அசோதரம் ஆளும் இரவிவன்மன் ஒரு பெருந்தேவி அலத்தகச் சீறடி
அமுதபதி வயிற்று
09-040

இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன் அத்திபதி எனும் அரசன்
பெருந்தேவி சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள் நீலபதி எனும் நேர் இழை
வயிற்றில் காலை ஞாயிற்றுக் கதிர் போல் தோன்றிய இராகுலன் தனக்குப்
புக்கேன் அவனொடு பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும் !எட்டு இரு
நாளில் இவ் இராகுலன் தன்னைத் திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால் தீ
அழல் அவனொடு சேயிழை மூழ்குவை
09-050

ஏது நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின் கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய
தவாக் களி மூதூர்ச் சென்று பிறப்பு எய்துதி அணி இழை! நினக்கு ஓர்
அருந் துயர் வரு நாள் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி அன்று அப்
பதியில் ஆர் இருள் எடுத்து தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும்
வேக வெந் திறல் நாக நாட்டு அரசர் சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து
ஆங்கு அறச் செவி திறந்து மறச் செவி அடைத்து
09-060

பிறவிப் பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும் திருந்து ஒளி ஆசனம்
சென்று கைதொழுதி அன்றைப் பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு இன்று யான்
உரைத்த உரை தௌிவாய்! என, சா துயர் கேட்டுத் தளர்ந்து உகு மனத்தேன்
!காதலன் பிறப்புக் காட்டாயோ?! என !ஆங்கு உனைக் கொணர்ந்த அரும் பெருந்
தெய்வம் பாங்கில் தோன்றி 'பைந்தொடி! கணவனை ஈங்கு இவன்' என்னும்!
என்று எடுத்து ஓதினை ஆங்கு அத் தெய்வதம் வாராதோ?! என ஏங்கினள் அழூஉம்
இளங்கொடி தான் என்
09-071