14 பாத்திர மரபு கூறிய காதை
ADVERTISEMENTS
14 பாத்திர மரபு கூறிய காதை
'ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகை பூங் கொடி நல்லாய்
புகுந்தது கேளாய் மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து ஆர் இடை
உழந்தோர் அம்பலம் மரீஇ துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி !வயிறு
காய் பெரும் பசி மலைக்கும்! என்றலும் ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன்
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த !கேள் இது மாதோ கெடுக நின் தீது! என
யாவரும் ஏத்தும் இருங் கலை நியமத்துத்
14-010
ADVERTISEMENTS
தேவி சிந்தாவிளக்குத் தோன்றி !ஏடா! அழியல் எழுந்து இது கொள்ளாய்
நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது வாங்குநர் கைஅகம் வருந்துதல்
அல்லது தான் தொலைவு இல்லாத் தகைமையது! என்றே தன் கைப் பாத்திரம் அவன்
கைக் கொடுத்தலும் !சிந்தாதேவி! செழுங் கலை நியமத்து நந்தா விளக்கே!
நாமிசைப் பாவாய்! வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி! ஏனோர் உற்ற இடர்
களைவாய்!! எனத்
14-020
ADVERTISEMENTS
தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி ஆங்கு அவர் பசி தீர்த்து அந்
நாள் தொட்டு வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின் மக்களும் மாவும்
மரம் சேர் பறவையும் தொக்கு உடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ பழு மரத்து
ஈண்டிய பறவையின் எழூஉம் இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப ஈண்டுநீர்
ஞாலத்து இவன் செயல் இந்திரன் பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின்
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி
14-030
வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும்
ஆர் உயிர் முதல்வன் தன் முன் தோன்றி !இந்திரன் வந்தேன் யாது நின்
கருத்து உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க! என வெள்ளை மகன் போல்
விலா இற நக்கு ஈங்கு எள்ளினன் !போம்! என்று எடுத்து உரை செய்வோன்
!ஈண்டுச் செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் காண்தரு சிறப்பின் நும்
கடவுளர் அல்லது அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர்
14-040
நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர் நல்
நாட்டுக்கு இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே வருந்தி வந்தோர் அரும் பசி
களைந்து அவர் திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை உண்டிகொல்லோ
உடுப்பனகொல்லோ பெண்டிர்கொல்லோ பேணுநர்கொல்லோ யாவை ஈங்கு அளிப்பன
தேவர்கோன்?! என்றலும் !புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு
இரப்போர்க் காணாது ஏமாந்திருப்ப
14-050
நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும் பரப்பு நீரால் பல் வளம்
சுரக்க!! என ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்கண்ணோன் ஓங்கு உயர் பெருஞ்
சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் பன்னீராண்டு பாண்டி நல் நாடு மன்
உயிர் மடிய மழை வளம் இழந்தது வசித் தொழில் உதவ மா நிலம் கொழுப்பப்
பசிப்பு உயிர் அறியாப் பான்மைத்து ஆகலின் ஆர் உயிர் ஓம்புநன் அம்பலப்
பீடிகை ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி
14-060
விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும் நடவை மாக்களும் நகையொடு வைகி
வட்டும் சூதும் வம்பக் கோட்டியும் முட்டா வாழ்க்கை முறைமையது ஆக
ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி ஊரூர் தோறும் உண்போர் வினாஅய்
!யார் இவன்?! என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு அருந்த ஏமாந்த ஆர் உயிர்
முதல்வனை !இருந்தாய் நீயோ!! என்பார் இன்மையின் திருவின் செல்வம்
பெருங் கடல் கொள்ள
14-070
ஒரு தனி வரூஉம் பெருமகன் போல தானே தமியன் வருவோன் தன்முன் மாநீர்
வங்கம் வந்தோர் வணங்கிச் !சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின் ஊன்
உயிர் மடிந்தது உரவோய்!! என்றலும் !அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப்
பெறாது குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி அங்கு அந் நாட்டுப் புகுவது
என் கருத்து! என வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி கால் விசை கடுகக்
கடல் கலக்குறுதலின்
14-080
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்துத் தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு
இழிந்தனன் !இழிந்தோன் ஏறினன்! என்று இதை எடுத்து வழங்கு நீர் வங்கம்
வல் இருள் போதலும் வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி அங்கு
வாழ்வோர் யாவரும் இன்மையின் !மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம்
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் தவம் தீர் மருங்கின் தனித் துயர்
உழந்தேன் சுமந்து என் பாத்திரம்?! என்றனன் தொழுது
14-090
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின் !ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று!
என விடுவோன் !அருள் அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர் உளர்எனில்
அவர் கைப் புகுவாய்! என்று ஆங்கு உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்ப்புழி
அந் நாள் ஆங்கு அவன் தன்பால் சென்றேன் !என் உற்றனையோ?! என்று யான்
கேட்பத் தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன் குண திசைத் தோன்றி கார்
இருள் சீத்துக் குட திசைச் சென்ற ஞாயிறு போல
14-100
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு
சாவகம் ஆளும் தலைத் தாள் வேந்தன் ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்தான்
என்
14-104